சேவாபாரதி அழைப்பு

கொரோனா 3வது அலையை எதிர்கொள்வதற்கான சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் சேவாபாரதியுடன் இணைந்து சேவை செய்ய, சேவாபாரதி அழைப்பு விடுத்துள்ளது. 3வது அலை வரும்பட்சத்தில், குழந்தைகளை பாதுகாத்தல், பெற்றோருக்கு விழிப்புணர்வு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரிவரை படிக்க ஆதரவு, ஆன்லைன் வழியாக படிக்க முடியாத குழந்தைகளுக்கு டியூஷன், வயதானவர்களுக்கு உதவி என பல்வேறு சேவைகளை சேவாபாரதி வழங்க உள்ளது. படித்தவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உதவும் மனம் கொண்டோர் என அனைவரும் இதில் இணையலாம். ஆர்வம் உள்ளவர்கள் 86084 15240 / 81229 46472 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சேவாபாரதி (தென் தமிழகம்) மாநிலத்தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.