எனது மூதாதையர்கள் ஹிந்துக்கள்

ஹிந்துக்களை ஆசை காட்டி, ஏமாற்றி, கடத்தி, மிரட்டி, காதலித்து என பல்வேறு வகைகளில் முஸ்லிமாக மாற்றும் போக்கு தற்போது தேசமெங்கும் பரவலாக அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆயிரக்கணக்கானோரை முஸ்லிம்கள் மதமாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு, பயங்கரவாதிகள் ஆதரவு, வெளிநாட்டு நிதியுதவி என பல்வேறு வழிகளில் ஆதரவு இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, பீகார் மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜமா கான், தனது மூதாதையர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள், ரஜபுத்திர வம்சத்தினர். தனது தாத்தா வழி மூதாதையரான பகவான் சிங் முஸ்லிமாக மதம் மாறினார். ஆனால், அவரது தம்பி ஜெய் ராம் சிங் ஹிந்துவாகவே வாழ்ந்தார். அவரது வழித்தோன்றல்கள் இன்னும் ஹிந்துக்களாகவே சாரையா கிராமத்தில் வசித்து வருகின்றனர் என தெரிவித்தார். மேலும், பெரும்பான்மையான முஸ்லிம்கள், எங்களின் பா.ஜ.க –  ஜே.டி.யு  தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்றாலும், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக எங்கள் அரசு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.