பென்ஷன் அதாலத்

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் எடுக்க விரும்புவோர்களுக்காக, ‘பென்ஷன் அதாலத்’ என்ற குறை தீர்க்கும் முகாமை, வரும் ஜூலை 20ம் தேதி மாலை 3:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையைப் பெற்ற ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை ‘பென்ஷன் அதாலத்’ என்று குறிப்பிட்டு, pension.rochn1@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். அதில் தங்களுடைய பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், அலைபேசி எண், உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். இணைய வழியில் நடத்தப்படவிருக்கும் இந்த குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கான இணைப்பு அந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.