பயங்கரவாதிகள் கைது

உத்தர பிரதேசத்தில் லக்னோவின் ககோரி பகுதியில் அல்கொய்தாவின் ‘அன்சார் கஜ்வட் உல் ஹிந்த்’ அமைப்புடன் தொடர்பு உள்ள பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பயங்கரவாத தடுப்பு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள், அங்கு சென்று சோதனை செய்து மினாஜ் அகமது மற்றும் மஸ்ருதீன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள், லக்னோவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.