உ.பி.,யில் மீண்டும் யோகி ஆட்சி

உத்தர பிரதேசத்தில் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தோ ஏசியன் நியூஸ் சர்வீஸ் என்கிற தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளில் 52 சதவீத மக்கள் மீண்டும் பா.ஜ.கவின் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என னம்பிக்கை தெரிவித்துள்ளனர். முன்னதாக, அங்கு நடைபெற்ற ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில், பா.ஜ.க பெருவாரியான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.