அண்ணாமலை அறிக்கை

தமிழக பா..ஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை, ‘தமிழக பா.ஜ.கவின்‌ தலைவர்‌ எனும்‌ பொறுப்பு என்னை பணிவும்‌, பெருமையும்‌ கொள்ள செய்கிறது. நம்‌ கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின்‌ உயிர்‌ தியாகங்களாலும்‌ மற்றும்‌ பல தன்னலமற்ற தலைவர்களின்‌ தியாகங்களாலும்‌ வழி நடத்தப்பட்டுள்ளது. பிரதமர்‌ நரேந்திர மோடியின்‌ தமிழ்‌ பற்றும்‌, தமிழ்‌ பண்பாடு மீது அவர்‌ கொண்டுள்ள பெருமையும்‌ அனைவருக்கும்‌ தெரியும்‌. நம்முடைய கட்சியின்‌ சித்தாந்தத்தையும்‌, உயிரான தேசப் பற்றையும்‌,‌ தமிழ்‌ மக்கள்‌ மீது பிரதமர்‌ கொண்டுள்ள பேரன்பையும்‌ தமிழகத்தின்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை நாங்கள்‌ ஓய மாட்டோம்‌. ஜெய்‌ ஹிந்த்‌ வாழ்க பாரதம்‌ வளர்க தமிழ்நாடு’ என தெரிவித்துள்ளார்.