பொது இடங்களில் சுவரொட்டிகள்

சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க ஏதுவாக, அரசு கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம். மேலும், சுவரொட்டிகள் இல்லாத சென்னை என்ற இலக்கை எட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுவரொட்டி அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவரொட்டி, சுவர் விளம்பரங்கள் செய்தே கட்சியை வளர்த்த ஆளும் கட்சியான தி.மு.கவும், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அவர்களது கூட்டணியினரும் இதனை பின்பற்றுவார்களா, அவர்கள் இதனை மீறும் பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.