சிக்கவைக்கப்பட்ட நம்பி நாராயணன்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை பொய் வழக்குப் போட்டு கைது செய்த இரண்டு முன்னாள் கேரள காவல்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுத் தாக்கல் செய்தது. அப்போது, நம்பி நாராயணனை அவர்கள் வழக்கில் பொய்யாக சிக்கவைத்ததாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. மேலும், கிரையோஜெனிக் தொழில்நுட்ப விவகாரத்தில் நம்பி நாராயணன் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக கூறப்பட்டதும் தவறு, அது சித்தரிக்கப்பட்ட பொய் என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.