ரேஷன் பொருட்களை திருடும் கட்சியினர்

டெல்லியில், ஏழைகளுக்கு வழங்குவதற்காக, ரேஷன் பொருட்கள் டெல்லி, அசோக் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியினர் சிலர், அந்த பள்ளி ஊழியர்களின் துணையோடு அங்கிருந்த ரேஷன் பொருட்களைத் திருடி, வெளி மார்க்கெட்டில் விற்று வந்தனர். இதனை அப்பகுதி பா.ஜ.கவினர் கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் ஏற்கனவே இப்படி பலமுறை திருடியுள்ளனர். அரிசி, கோதுமை அடங்கிய 516 உணவு பொருட்கள் தொகுப்பு ஏற்கனவே திருடப்பட்டிருந்தன, ஆம் ஆத்மி கட்சியினரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ரேஷன் பொருட்கள் பள்ளிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியி நடவடிக்கை எடுக்கக் கோரி, அம்மாநில பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர்.