த.மு.மு.கவினர் கைது

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, த.மு.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில், மனநலம் பாதித்த சிறுவன் ஒருவனின் உடலில் நாமம் வரைந்து போராட்டத்தில் முன்னிறுத்தி த.மு.முகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணியினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, த.மு.மு.க., நிர்வாகிகள் அப்துல் ஹக்கீம், முஜ்பூர் ரஹ்மான், முகமது பரோஸ் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.