அங்கன்வாடியில் தரமற்ற முட்டைகள்

ராமநாதபுரம், கடலாடி அருகே ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு வழங்கப்படும், அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் ஆகியவை குழந்தைகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கன்வாடி ஊழியர்களால் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகளில் பல அழுகியும், குஞ்சுகள் உருவான நிலையிலும் இருந்தன. இதனையடுத்து, அங்கன்வாடி பொறுப்பாளரிடம், பெற்றோர்கள் புகார் அளித்தனர். நல்ல தரமான முட்டைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.