கோயில் நிலம் ஒப்படைப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் அடுத்த கண்டியன்கோவில் கிராமம், முதியாநெரிசலில் கண்டீஸ்வரர் கோயிலின் நிலம் 6.80 ஏக்கர் உள்ளது. இதன் மதிப்பு 2 கோடி ரூபாய். அதனை அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் பயன்படுத்தி வந்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறையினரிடம் நிலத்தை மீண்டும் கோயிலுக்கே ஒப்படைக்கிறோம் என அதனை பயன்படுத்தி வந்தவர்கள் எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து, ‘இந்த நிலம் கண்டீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம்’ என, அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.