லட்சத்தீவு அனுமதி மறுப்பு

லட்சத்தீவிற்கு பயணம் செல்ல காங்கிரஸ் எம்.பிக்கள், கம்யூனிஸ்ட் எம்.பிக்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், லட்சத்தீவு ஆட்சியர் அஸ்கர்அலி வெளியிட்ட அறிக்கையில்,‘‘லட்சத் தீவு மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளபயணம் மேற்கொள்ள விரும்புவதாக எம்.பி.க்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் பயணம்அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. அவர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது. எனவே அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.