போதை பொருள் பறிமுதல்

மகாராஷ்டிராவின் நவிமும்பை நகரில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தில், போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.300 கோடி மதிப்பிலான 290 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு இவ்வழக்கு வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இந்த போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.