சிக்னல் மீறினால் தானியங்கி அபராதம்

சலை சிக்னல்களில் விதிமீறல் நடப்பது சகஜமாக உள்ளது. விதி மீறும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்க முடிவதில்லை. இதற்காக புதிய தொழில்நுட்பத்தை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் ஐந்து முக்கிய சிக்னல் பகுதிகளில், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு, வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு அபராத ரசீது அனுப்பப்படும் முறை துவங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தினால் போக்குவரத்து விதிமீறல், விபத்துகள், லஞ்சம் என அனைத்தும் பெருமளவு குறையும்.