ஈரான் பயங்கரவாத மையங்கள் மீது தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிரியா, ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் கண்டறியப்பட்ட சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அமெரிக்காவின் ராணுவ மையம் பென்டகன் தெரிவித்துள்ளது.