கடத்தல் ஆசாமி கட்சியில் சேர்ப்பு

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2022 டிசம்பரில் நடைபெறவிருக்கிறது. அதில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இச்சூழலில், சூரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரியான மகேஷ் சவானி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இவர் சமூகசேவை என்ற பெயரில் பல மோசடிகளை செய்வதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டில், கௌதம் படேல் என்பவரை கடத்தி 19 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவர். கௌதமை மகேஷ் சவானி கடத்திய வீடியோ ஆதாரங்களை வைத்து அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.