நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

தொழில் நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர். செல்வவிநாயகம் மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குனர்கள், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோருக்கு சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். அதில், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதையும், மருத்துவக் காப்பீடு கட்டாயமாக இருப்பதையும் உறுதி செய்தல் அவசியம். தொழில் நிறுவன வளாகங்கள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும். பணியாளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே அவர்களை நிறுவனங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியரை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.