வாரன் பஃபெட் ராஜினாமா

வாரன் பஃபெட் பில்கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து உருவாக்கியது கேட்ஸ் அறக்கட்டளை. இது உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்று. இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியை இதுவரை வகித்துவந்தவர் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பஃபெட். அவர் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த பதவிக்கு, பி.எம்.ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் சிறந்த தேர்வாக இருப்பார் என கூறியுள்ளார். மேலும், அவர், தனது சொத்தில் இருந்து 4.1 பில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்குவதாகவும் கூறினார். பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்வதாக அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.