எஸ்.டி.பி.ஐ குற்றவாளி கைது

கேரள மாநிலம் அலப்புழா, வயலாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நந்து கிருஷ்ணா என்ற ஸ்வயம்சேவகரை கடந்த 2021 பிப்ரவரி 24 அன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நிஹாஸ் என்பவன் கைது செய்யப்பட்டான். இவ்வழக்குத் தொடர்பாக இதுவரை 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்