மதமாற்ற ஜிஹாதிகள் மீது என்.எஸ்.ஏ

ஆயிரத்திற்கும் அதிகமான ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களை முஸ்லிமாக மதம் மாற்றி பயங்கரவாதத்திற்கு ஊக்குவித்த முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம், முகமது ஒமர் கௌதம் ஆகியோரை கடந்த ஜூன் 21 அன்று உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப்படை கைது செய்தது. விசாரணையில் அவர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உள்ளிட்ட பல வெளிநாடுகள் நிதியுதவி அளித்ததும், மதம் மாற்றப்பட்டவர்களை தேவைப்படும்போது மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த அவர்கள் முயற்சித்ததும் தெரியவந்தது. இதனால், அவர்கள் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் அறிவுறுத்தியுள்ளார்.