முஸ்லிம்களின் கட்டாய மதமாற்றம்

உத்தர பிரதேசத்தில் வசிக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு மாற்ற முயற்சித்தனர் நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கௌதம், ஜஹாங்கீர் என்பவர்கள். பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, ஆயிரத்திர்கும் அதிகமானோரை இவர்கள் கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர். இதற்காகவே, நொய்டா ஜாமியா நகரில் ‘இஸ்லாமிய தாவா சென்டர்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அங்குதான், மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் பணி நடக்கிறது. பணம், வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவற்றை காட்டி மதம் மாற்றுகின்றனர். ஒரு பெரும் கும்பல் இந்த வேலையை செய்து வருகிறது என தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.