சம்பத் ராய் மீது பொய் புகார்

நரேன் என்பவர் தனது சமூக ஊடகப் பதிவில், ‘வி.எச்.பி தலைவரும், ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடையவர். வெளிநாட்டில் வாழும் அல்கா லஹோட்டிக்கு என்பவருக்கு சொந்தமான 20,000 சதுர மீட்டர் கோசாலை நிலத்தை அபகரிக்க சம்பத் ராய் குடும்பத்தினர் முயற்சித்தனர். அதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் முறையிட்டோம்’ என்று அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இது குறித்து பிஜ்னோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நரேன் உடன் இணைந்து இதில் சம்பந்தப்பட்ட லஹோட்டி, ரஜ்னீஷ் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.