வீட்டை இடித்த கிறிஸ்தவர்கள்

‘ஹிந்து ஆலயங்கள் இருக்கும் இடம் எல்லாம் சாத்தான் இருக்கும் இடம்’ என்று கூறியவர் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ். ‘ஹிந்துக்களின் முகத்தில் குத்துங்கள்’ என்று கூறியவர் எஸ்றா சற்குணம். இவர்களுக்கு எதிராக பெரிய அளவில் முந்தைய தமிழக அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது கசப்பான உண்மை. இந்நிலையில், தற்போது தென்காசியில் ஒருவர் வீட்டின் முகப்பு தங்களுடைய கிறிஸ்தவ தேவாலயத்தை மறைப்பதாகக் கூறி, அவரது வீட்டு ஜன்னலையும் ஆட்டோவையும் மர்ம நபர்கள் நள்ளிரவில் அடித்து உடைத்துள்ளனர். தற்போதைய தமிழக அரசு, இதில் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.