முகுல் ராய் ராஜினாமா செய்ய மறுப்பு

மேற்கு வங்கத்தில், திருணமூல் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தவர் முகுல் ராய். இவர் பா.ஜ.க சார்பாக வடக்கு கிருஷ்ணா நகர் தொகுதியில், தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் திருணமூல் கட்சியில் இணைந்த அவர் தனது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளதாக பா.ஜ.க சட்டசபைத் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.