நாங்கள் சான்றளிக்கப்பட்ட குண்டர்கள்

மகாராஷ்டிரா, மும்பையில் சேனா பவனுக்கு வெளியே அயோத்தி குறித்து சிவசேனாவின் சாம்னாவில் வந்த செய்தி குறித்த பிரச்சனையில் சிவசேனாவுக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குண்டர்கள் என்பதற்கு யாரும் எங்களுக்கு ஒரு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை, நாங்கள் சான்றிதழ் பெற்ற குண்டர்கள்” என்று பெருமையாக கூறினார். அவரின் இப்பேச்சு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், ‘எந்தக் கட்சியும் குண்டர்களைப் போல நடந்து கொள்ள அனுமதிக்க முடியாது. அனைவரும் சட்டத்தின்படிதான் நடந்துக்கொள்ள வேண்டும்’ கூறினார்.