விவசாய போராளிகளின் அட்டூழியங்கள்

டெல்லி ஹரியானாவின் எல்லையான திக்ரியில் முகாமிட்டு விவசாய சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக கமிஷன் ஏஜெண்டுகளும், அவர்கள் அடிபொடிகளும் போராடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அதில் ஒரு குழுவினர் தங்கள் சக ஆர்ப்பாட்டக்காரரான முகேஷ் என்பவரை உயிரோடு தீ வைத்து எரித்துள்ளனர். அதனை படம் எடுத்து அவரை போராட்டத் தியாகியாக சித்தரிக்கவும் முனைந்தனர். ஆனால், விசாரணையில், அவர் சக ஆர்பாட்டக்காரர்களுடன் இணைந்து போதை பொருட்களை உட்கொண்டதும், அப்போது ஏற்பட்ட சண்டையில், அவரை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன் அவருக்கு அக்குழுவினரே தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. இதேபோல, கடந்த ஏப்ரலில் காசர் கிராமத்தில் குர்பிரீத் சிங் என்ற ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டார். மார்ச் 25ல் ஹக்காம் சிங் என்ற விவசாயி, சக போராட்டக்காரர்களால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார். பல பாலியல் துஷ்பிரயோகங்களும் நடைபெற்றுள்ளன.