இந்தியாவில் இஸ்ரேல் விவசாய முறை

தோட்டக்கலை துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இஸ்ரேலில் விவசாயம் செய்யப்படுகிறது. அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கர்நாடகாவின் கோலார், பாகல்கோட், தார்வாட் ஆகிய மூன்று மாவட்டங்களில் தோட்டக்கலை துறை உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  இதன்படி நாட்டின், 29 நகரங்களில் தோட்டக்கலை உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை காணொலி காட்சி வாயிலாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திறந்து வைத்தார். இதற்காக, செயற்கைகோள் அளிக்கும் தகவல்படி நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், இயற்கை உரம், ஆகியவற்றை கொண்டு விவசாயம் செய்ய கர்நாடக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.