ஊடுருவல்காரர்கள் கைது

வங்கதேசத்தை சேர்ந்த சிலர் நமது எல்லைப் பகுதியில் சுற்றித் திரிந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில், இவர்கள் அனைவரும் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் அம்மாநிலத்தில் வாக்குரிமை பெற்றுள்ளதும் தெரியவந்தது. அம்மாநில அமைச்சர் ஒருவரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அவரிடம் சொல்லி பி.எஸ்.எப். வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளனர் இவர்கள்.