பலிகடா ஆக்கப்பட்ட நடிகை

லட்சத்தீவு மக்களைக் கொல்ல மத்திய அரசு, கொரோனாவை உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறிய நடிகையும் தயாரிப்பாளருமான ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய அவர், அது வாய் தவறி வந்த சொல், அந்த நிகழ்ச்சியை வெளியிட்ட மீடியா ஒன் மலையாள செய்தி சேனல், தன்னுடைய கருத்தை வெளியிட அவகாசம் அளிக்கவில்லை, பலமுறை கேட்டும் வாய்ப்பை மறுத்துவிட்டது, தன்னை வேண்டும் என்றே சிக்க வைத்து விட்டது என கூறியுள்ளார். மீடியா ஒன் சேனலுக்கு நிதியளித்து நடத்துவது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு என்பதும் அது, லட்சத்தீவு நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து போலி செய்திகளை வெளியிட்டு மக்களைத் தூண்டிவிடுவதில் அதிக முனைப்பு காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.