அக்கறை கொண்ட குடிமக்கள்

‘அக்கறை கொண்ட குடிமக்கள் – தமிழ்நாடு’ என்பது, ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள், சமுதாய தலைவர்கள், ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கல்வித்துறை சார்ந்தவர்கள், தொழில்துறை சார்ந்தவர்கள் போன்ற முக்கியஸ்தர்களை கொண்ட ஒரு அமைப்பு. சமீபத்தில், மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பாக நடந்த அரசியல் வன்முறைகள் இந்த அமைப்பினருக்கு மன வருத்தத்தை அளித்தது. அதனால், மேற்கு வங்கத்தின் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உடனடியாக தடுத்து அமைதியை நிலைநாட்ட, வன்முறையாளர்களை தண்டிக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளித்திட, பல்வேறு துறைகளை சார்ந்த 74 முக்கியஸ்தர்கள் தங்களது கையொப்பம் இட்ட கடிதங்களை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் அளித்திட, இக்கடிதங்களை இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கல்யாண், சின்மயா மிஷனை சார்ந்த சுவாமி திரு. மித்ராநந்தா, நடிகர் சரத் பாபு ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வழங்கினர். மேலும், குடியரசுத்தலைவர், இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.