விஜயகாந்த் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த சூழலில் அடிக்கடி நடக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  உயர்ந்து வரும் மின்கட்டணத்தையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை போக்க, மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க, உயர்ந்து வரும் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த 12ம் தேதி, ‘கட்டுமான தொழிலை மேம்படுத்த, இமயம் போல் உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கோரியுள்ளார்.