உலகத்தர பேருந்து நிலையம்

அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயில் கட்டப்படவுள்ளது. உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விமானம், ரயில், பேருந்து என பல்வேறு மார்கங்களில் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். இதைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. அதனையொட்டி, அயோத்தியில் ரூ. 400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அம்மாநில கலாசாரத் துறை வசமுள்ள 9 ஏக்கர் நிலம் போக்குவரத்துத் துறையிடம் வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.