சபாநாயகராகிறார் பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. கடந்த மே 7ல் புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த ரங்கசாமி பதவி ஏற்றார். சபாநாயகர், அமைச்சர்கள் பதவி தொடர்பாக பா.ஜ.க ஆலோசனை நடத்தியது. அதில், ஏம்பலம் செல்வத்தை சபாநாயகர் பதவிக்கும், அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. சபாநாயகர் தேர்தலில், வேறு யாரும் போட்டியிடாததால் பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகராக பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.