விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்த நிகில்

கொரோனாவுக்கான நிவாரண நிதி திரட்டும் முயற்சிகளின் ஒன்றாக கிராண்ட் மாஸ்டர் விஸ்வனாதன் ஆனந்துடன் செஸ் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஜிரோதா மற்றும் டீம் பெக்கனின் இணை நிறுவனர் நிகில் காமத் கலந்துகொண்டார். அந்த சதுரங்க விளையாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிகில் காமத், விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார். போட்டியில், ​​காமத் 98.9 சதவீதமும், விஸ்வநாதன் ஆனந்த் 92.7 சதவீதம் துல்லியத்துடனும் விளையாடினர். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், ‘நான் உசேன் போல்ட்டுடன் போட்டியிட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வென்றேன் என சொன்னால் நம்புவீர்களா? அதை போலவேதான் இந்த விளையாட்டும். இந்த விளையாட்டில் நான் முறைகேடாகத்தான் ஜெயித்தேன். எனக்கு வெளியில் இருந்து உதவி கிடைத்தது’ என உண்மையை ஒப்புக்கொண்டார் நிகில் காமத். இதனையடுத்து, முறைகேடாக விளையாடியதற்காக செஸ்.காம் நிறுவனம் அவரது கணக்கை முடக்கியது.