மாநிலங்களுக்கு உயிர் காற்று

கொரோனா காலத்தில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்திருந்த நிலையில், மத்திய அரசு சரியான நேரத்தில், சரியான முயற்சிகளை எடுத்து தேவையான ஆக்ஸிஜனை ரயில்கள், சாலை, விமானம், கப்பல்கள் மூலம் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்தது. தற்போது ஆக்ஸிகனுக்கான தட்டுப்பாடு எந்த மாநிலத்திலும் இல்லை எனும் அளவிற்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை 4,941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே தொடர்ந்து வினியோகித்து வருகிறது. இதுவரை, 421 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1,734 டேங்கர்களில் 30,182 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகம் செய்துள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கு 15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது. மக்களைக் காக்க, தற்போதும் 10 டேங்கர்களில் 177 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 2 ரயில்கள் பயணித்துக் கொண்டுள்ளன. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் தங்களது பயணத்தைத் துவங்க உள்ளன.