தமிழக பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 2 வாரமாக முழு ஊடரங்கை அமல்படுத்தியது. இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையொட்டி, கொரோனா தொற்று குறைவாக காணப்படும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதற்கு பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்னர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்தது. அதன்படி, டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சித் தலைவர் எல். முருகன், பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, உள்ளிட்டோர் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.