சேவாபாரதி கோவிட் கேர் சென்டர்

சேவாபாரதி மற்றும் ஹார்ட்புல்னெஸ் சார்பாக, திருப்பூர், பல்லவராயன் பாளையத்தில் இலவச ‘கோவிட் கேர் சென்டர்’ துவக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கையான சூழலில், 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்புடன் 200 படுக்கை வசதிகள், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், சத்தான உணவு, மூச்சுப் பயிற்சி, மனநல பயிற்சிகள் உள்ளிட்ட சிறந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் எந்தவித கட்டணங்களுமின்றி முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் உதவி & தொடர்புக்கு: 9342483050.