மதமாற்ற ஜிஹாத்

மகாராஷ்டிராவின் மாலேகானில் வசிக்கும் 23 வயதான மஜீத் கான், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, திருமணத்திற்காக மதம் மாற்ற முயன்றார். சிறுமி மதம் மாற மறுத்த காரணத்தால், ​​கான் தனது மற்ற மூன்று நண்பர்களை அழைத்து வந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டியுள்ளார். சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் இந்த விஷயம் பற்றி குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. தற்போது, அந்த நான்கு பேர் மீதும் போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மத சுதந்திரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஜீத் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற மூவரையும் கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.