புதிய கொரோனா தடுப்பு மருந்து

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பயோபோர் இந்தியா நிறுவனம், ‘அவிப்டடில்’ என்ற கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு, அவிப்டடில் மருந்து நிவாரணம் அளிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த மருந்திற்கு, அவசர கால பயன்பாட்டு உரிமம் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் மருந்து தயாரிப்பு துவங்கும். கொரோனா சிகிச்சைக்கான, ‘பேவிபிரவிர்’ மருந்து தயாரிக்க, பயோபோர் நிறுவனம் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.