தடுப்பூசி போடாத சோனியா, ராகுல்

தினமும் தூங்கி எழுந்ததும் அனிச்சையாக தடுப்பூசி தடுப்பூசி என்று பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்பதை பா.ஜ.க அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சோனியாவும், ராகுலும் தொடர்ந்து தடுப்பூசி பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் பீதியை கிளப்புகின்றனர். இத்தனைக்கும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி பற்றி ஏராளமான சந்தேகங்களை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டனர். ஆனால் எனக்கு தெரிந்தவரை, சோனியாவும், ராகுலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் ஏன் இந்திய தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்’ என்று கூறியுள்ளார்.