தொழிலாளர்களுக்கு உதவிடும் உ.பி அரசு

உத்தரபிரதேசத்தில் 23 லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூ.1,000 வீதம் மொத்தம் 230 கோடி அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடியே 65 லட்சத்து 31 ஆயிரம் தொழிலாளர் குடும்பத்தினருக்கு 20 கிலோ கோதுமை, 15 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் ஐந்து தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கி துவக்கிவைத்தார். மற்றவர்கள் அனைவருக்கும் நிவாரணத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.