பொய் கூறும் பிரபல நடிகை

மேற்கு வங்கத்தின் மிகப்பிரபலமான நடிகையும் திருணமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான், தன் கணவர் நிகில் ஜெயினுடனான திருமண உறவு முறிவு குறித்து இறுதியாக தனது மௌனத்தைக் கலைத்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் என் கணவரிடம் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்துவிட்டேன். எங்களது திருமணம் துருக்கியில் சட்டப்படி செல்லுபடியாகாது. துருக்கிய விதிமுறைகளின்படி இது திருமணம் அல்லாத ஒரு உறவுமுறை மட்டுமே’ என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்குத் தெரியாமல் தனது நகைகள், குடும்ப நகைகள், சொத்துக்கள், பணம் பல்வேறு கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அப்படியெனில், அவர் இந்திய அரசியல் அமைப்பின்படி சத்திய பிரமாணம் செய்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றது செல்லாது. சட்டத்தை ஏமாற்றியுள்ள அவர் மீது உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக இந்த நடிகை ஒரு புகைப்படக் காட்சிக்காக துர்கா தேவிபோல ஆடை அணிந்தார். அதனால் அவரை கொல்லப்போவதாக முஸ்லிம் பயங்கரவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.