மாற்றப்படுகிறதா தலைமை செயலகம்?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘தற்போது கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து, சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டடம் மீண்டும் சட்டசபையாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது வருத்தத்திற்கு உரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. எனவே, இந்த செய்தி உண்மையாக இருந்தால், முதல்வர் இதில் தலையிட்டு அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.