உலக பல்கலைக்கழக தரவரிசை

உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 1000 பல்கலைக்கழகங்கள் வரிசையில் முதல்முறையாக தரவரிசையில் இடம்பிடித்தது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்த தரவரிசை இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்கும் நிறுவனங்களை மட்டுமே மதிப்பிடுகிறது. தற்போது அப்பல்கலைக்கழகம் புதிதாக அறிமுகப்படுத்திய இளங்கலை பொறியியல் திட்டத்தினால், இப்பல்கலைக்கழக தரவரிசை மதிப்பீட்டிற்கு தகுதியுடையதாக மாறியுள்ளது. தரவரிசையில் 561-570 இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசையில் பாரதத்தை சேர்ந்த 22 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர் மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி இந்த தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. ஐ.ஐ.டி பம்பாய் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக பாரதத்தின் சிறந்த கல்வி நிறுவனமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும் உலக தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி 177 வது இடத்தை பிடித்துள்ளது.