நடிகையின் தேச விரோத கருத்து

சமீப காலமாக, லட்சத்தீவில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தேச விரோத உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றனர். இந்த நேரத்தில்,  நடிகை ஆயிஷா சுல்தானா ஒரு முஸ்லிம் அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடைய மலையாள செய்தி சேனலான மீடியா ஒன்னில், பேசுகையில், லட்சத்தீவுக்கு எதிராக கொரோனாவை உயிரியல் ஆயுதமாக பாரத அரசு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட பா.ஜ.க பிரதிநிதி,  ஆயிஷா சுல்தானா உடனடியாக தனது தேச விரோத கருத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த நடிகை அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அவரது சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கள் குறித்து பாலக்காடு, பதனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் காவல் நிலையங்களில் பா.ஜ.கவினர் புகார்களை அளித்துள்ளனர்.