தி.மு.கவினர் திருடிய கருங்கற்கள்

திருச்சி, சோபனாபுரத்தில் கிராம பஞ்சாயத்து அலுவலகக் கட்டுமானத்துக்கு கொண்டுவரப்பட்ட கருங்கற்களில் மீதமுள்ள ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கற்கள், கட்டடத்தின் எதிரில் உள்ள அரசு காலி நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்திரன், பஞ்ஞாயத்துக் கவுன்சிலர் ஆபிதா பானுவின் கணவர் சவுகத் அலி ஆகியோர் துணையுடன் கற்களை சிலர் டிராக்டர் மூலம் கொண்டு சென்றுள்ளனர். வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் சோபா கண்ணன் துாண்டுதலின் பேரில்தான் கற்கள் திருடப்பட்டுள்ளன. திருடியவர்கள் தி.மு.கவினர் என்பதால் தற்போதைய தலைவர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, சோபனாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் திருப்பதி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.