பொய் சொல்லி பிடிபட்ட சிதம்பரம்

‘கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசுதான் மொத்தமாக வாங்கி மாநில அரசுகளுக்குத் தர வேண்டும். எந்த மாநில அரசும் தாங்களே தடுப்பூசியை வாங்கிக்கொள்கிறோம் என கூறவில்லை’ என தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் முன்னாள் ரீகௌண்டிங் மினிஸ்டரான ப.சிதம்பரம். இதற்கு உடனே நாங்கள் தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மமதா பானர்ஜி, பிரதமருக்கு எழுதிய கடிதம், மாநில அரசுகளை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற ராகுலின் கடிதம், தமிழக அரசின் டெண்டர் என அனைத்து விஷயங்களையும் நெட்டிசன்கள் ஆதாரத்துடன் அவருக்கு எதிராக பதிவிட்டனர். இதனால், வேறு வழியின்றி நான் திருத்திக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.