விண்ணில் பறக்கும் சிமெண்ட்

கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் தரப்பட்டுள்ளன. இதனால், விற்பனை மந்தமான நிலையில் இருந்த சிமெண்ட் விலை, தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 440 ரூபாயக இருந்த சிமெண்ட் மூட்டை, தற்போது 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வேறு எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது கட்டுமானத்துறையினர் மட்டுமல்ல வீடு கட்ட நினைக்கும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி, விலையை உடனடியாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத் துறையினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.