சிவன் கோயில் நிலம் மீட்பு

அசாம் மாநிலம் தர்ரங் மாவட்டத்தில் சிபஜஹா தல்பூர் சிவன் கோயிலைச் சுற்றி 72 ஏக்கர் நிலம் உள்ளது. மிகப் பழமையான இக்கோயிலின் நிலம், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. 48 ஏக்கர் நிலம் அவர்கள் வசம் இருந்து வந்தது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மாவின் ஆணையின்படி அங்குள்ள வங்கதேசத்தவர்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் சொத்து மீட்கப்பட்டது.